நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இந்திரா காந்தி பிறந்த நாள்: ராகுல், கார்கே மரியாதை!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை.

News image

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல், கார்கே.

Updated On :19 நவம்பர் 2024, 10:16 am IST

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி, புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று (நவ.19) மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இது தொடர்பாக, ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தைரியம் மற்றும் அன்பு இரண்டிற்கும் பாட்டி ஒரு சிறந்த உதாரணம். தேச நலன்களுக்கான பாதையில் அச்சமின்றி நடப்பதே உண்மையான பலம் என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அவருடைய நினைவுகள் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியின் வாழ்க்கையின் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் புதிய உத்வேகம் பெறுவார்கள். இந்திரா காந்தி வாழ்நாள் முழுவதும் போராட்டம், ஆற்றல்மிக்க தலைமை, தைரியம் ஆகியவற்றுக்கு உதாரணமாக இருந்தார். அவர் நாட்டிற்காக தன்னலமின்றி உழைத்தார்.

இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காக்க தன்னுடைய உயிரையும் தியாகம் செய்தார். அவரது பிறந்த நாளுக்கு எங்களது பணிவான அஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.