அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சர் செந்தில்பாலாஜி

2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

Published On :24 நவம்பர் 2024, 10:32 pm IST

கோவை: 2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திமுக வழக்குரைஞர் அணி ஆலோசனைக் கூட்டம், திமுக சட்டத்துறை மூத்த வழக்குரைஞர் என்ஆர்.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் கேஎம். தண்டபாணி வரவேற்புரையாற்றினார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மறைந்த மூத்த வழக்குரைஞர் ஏ.கே.ராஜேந்திரன் திருவுருவ படத்தை திறந்து வைத்து தலைமை உரையாற்றினார்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

உள்ளாட்சி தேர்தலில் ஆரம்பம் முதல், தேர்தல் முடியும் வரை இரவு பகல் பாராமல் உழைத்த சட்டத்துறையினருக்கும், அனைத்து வழக்குரைஞர்களுக்கும் நன்றி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆரம்பத்திலிருந்தே அனைத்து பணிகளையும் பார்ப்பது வழக்குரைஞர்கள். வாக்கு சேகரிப்பது முதல் வாக்கு சான்றை கையில் பெறும் வரை வழக்குரைறிஞர்களின் பணி சிறப்பானது.

மறைந்த ஏ.கே. ராஜேந்திரன் கட்சிக்காக ஆற்றிய பணிகளை பாராட்டிய செந்தில்பாலாஜி, அவருக்கு வீர வணக்கத்தை செலுத்துவதாக தெரிவித்தார். மாவட்ட கழகம் சார்பில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் 80 சதவிகித வழக்குகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் என கூறினார்.

மேலும் வரும் 2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுகவின் இரும்பு கோட்டையாக கோவை மாற வேண்டும். அந்த அளவிற்கு நமது பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும். வழக்குரைஞர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து பணியாற்றி கோவையின் 10 தொகுதிகளையும் வெற்றெடுத்தோம் என்ற பெருமையை அடைய வேண்டும். அதற்கான வெற்றி பயணத்தை இப்போதே தொடங்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.