எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியாக டிச. 2 ஆம் தேதி காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் நடந்த வன்முறை, மணிப்பூர் கலவரம் ஆகிய விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று(நவ. 29) 4-ஆவது நாளாக முடங்கியது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடர் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை முதல், அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு, சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது நிகழ்ந்த வன்முறை ஆகிய விவகாரங்கள் குறித்து உடனடி விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிக்க: திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை: இபிஎஸ் விமர்சனம்
எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டுவந்த நிலையில், டிச. 2 ஆம் தேதி காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவா் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
அமளிக்கு மத்தியில் ஜகதீப் தன்கர் பேசுகையில், ”இதை ஊக்குவிக்க முடியாது. தவறான முன்னுதாரணத்தை நாம் உருவாக்குகிறோம். பொறுத்தமற்ற நிலைக்கு நாம் செல்கிறோம்” என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!

மாநிலங்களவை நியமன உறுப்பினராக ஹரிவன்ஷ் நாராயண் நியமனம்!

மாநிலங்களவை எம்பிக்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் பதவியேற்பு!

ஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


