திடீரென தீப்பிடித்து எரிந்த மின்சார பைக்!

முற்றிலும் எரிந்து நாசமான மின்சார பைக்.
bike
தீப்பிடித்து எரிந்த மின்சார பைக்Din
Published on
Updated on
1 min read

வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு அம்முண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரித்திக் குமார் என்பவர் சொந்தமாக தேநீர் கடை ஒன்று நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று(அக். 2) மதியம் உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு தனக்கு சொந்தமான 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சார இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, வீட்டின் அருகில் நிறுத்தியபோது இருசக்கர வாகனத்தின் அடிப்பகுதியில் திடீரென புகை வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலுமாக நாசமாகிவிட்டது.

மின்சார வாகனம் எரிந்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், ரத்தனகிரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த ரத்தனகிரி காவல்துறையினர் இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com