25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

காங்கிரஸ் கூட்டணி முன்னிலை: காஷ்மீர் ஆப்பிள் கொடுத்து தமிழகத்தில் கொண்டாட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 7:46 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை காங்கிரஸ் கூட்டணி முன்னிலைப் பெற்றுவரும் நிலையில், தமிழகத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின், தற்போது பேரவைத் தோ்தல் நடைபெற்றுள்ள நிலையில், மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்றது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி, ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி(இந்தியா கூட்டணி) 50 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெற்று காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருப்பதால், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர், காஷ்மீர் ஆப்பிள்களை மக்களுக்கு கொடுத்தும், பட்டாசுகளை வெடித்தும் முன்னிலை நிலவரங்களை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:

ஜம்மு-காஷ்மீர்:

காங்கிரஸ் கூட்டணி - 51

பாஜக - 27

பிற கட்சிகள் - 12

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.