ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது!
ராமேசுவரம் மீனவர்கள் கைது
ராமேசுவரம் மீனவர்கள் கைது
Published on
Updated on
1 min read

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது இரு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளனர்.

இரண்டு விசைப்படகுகளுடன் 16 மீனவர்களை கைது செய்து, காங்கேசன் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளையும், கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நாளை(அக். 23) ஒப்படைக்கப்பட உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com