சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஹேமா குழுவின் முழு அறிக்கையும் தேவை: தேசிய மகளிர் ஆணையம்

நீதிபதி ஹேமா குழுவின் முழு அறிக்கையையும் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

News image

தேசிய மகளிர் ஆணையம்

Updated On :1 செப்டம்பர் 2024, 4:14 am

DIN

மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிபதி ஹேமா குழுவின் முழு அறிக்கையையும் பெற முயற்சித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே வெளியான அறிக்கையில் சில தகவல்கள் மட்டுமே பொதுவெளியில் வெளியிடப்பட்ட நிலையில் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'பெண்களின் உரிமைகள், பாதுகாப்பான மற்றும் சமத்துவ பணிச்சூழலை உறுதிப்படுத்தும் நோக்கில், பாதிக்கப்பட்ட பெண்களின் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவாதிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே, நீதிபதி ஹேமா குழுவின் முழு அறிக்கையையும் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.