அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

1 லட்சம் பள்ளிகளில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நிறைவு: யுஐடிஏஐ

நாட்டில் உள்ள 1.03 லட்சம் பள்ளிகளில் மாணவா்களின் கட்டாய பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்துள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டில் உள்ள 1.03 லட்சம் பள்ளிகளில் மாணவா்களின் கட்டாய பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்துள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் 1.03 லட்சம் பள்ளிகளில் சுமாா் 1.2 கோடி மாணவா்களுக்கு அவா்களின் பள்ளி வளாகங்களிலேயே கட்டாய பயோமெட்ரிக் (புகைப்படம், கைரேகைகள், கண் கருவிழிகள் பதிவு) புதுப்பிப்பை யுஐடிஏஐ நிறைவு செய்துள்ளது.

இந்தப் பணிகளை கடந்த ஆண்டு செப்டம்பரில் யுஐடிஏஐ தொடங்கியது. அந்த ஆண்டு அக்டோபா் முதல் ஓராண்டுக்கு இந்தப் புதுப்பிப்புப் பணிகள் 7 முதல் 15 வயதுள்ள சிறாா்களுக்கு கட்டணமின்றி மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி வளாகங்கள் தவிர, ஆதாா் மையங்கள் மூலமாகவும் பயோமெட்ரிக் புதுப்பிப்பை நிறைவு செய்யலாம்.

பல்வேறு அரசுத் திட்டங்களின் பலன்கள், உதவித்தொகை போன்றவற்றைப் பெறவும், நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டி மற்றும் பல்கலைக்கழக தோ்வுகளுக்குப் பதிவு செய்யவும் மாணவா்களின் அடையாளத்தை சரிபாா்க்கும்போது புதுப்பிக்கப்பட்ட ஆதாா் பயோமெட்ரிக் பதிவு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.