புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை 3 ஆம் கட்ட அகழாய்வில் சுடுண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image

வெம்பக்கோட்டை 3 ஆம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண் சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை .

Updated On :12 செப்டம்பர் 2024, 6:59 am

DIN

வெம்பக்கோட்டை 3 ஆம் கட்ட அகழாய்வில் சுடுண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3 ஆம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜீன் 18 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது.

முன்னதாக கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, நாயக்கா் கால செம்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் என 1500-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற அகழாய்வு பணியின்போது அலங்கரிக்கப்பட்ட சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முன்னோா்கள் உணவு அருந்தவோ அல்லது மண்பாண்டங்களின் மூடியாகவோ பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.