பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

முள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் வியாழக்கிழமை(ஏப்.10) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

News image
வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வரும் காளைகளை அடக்கும் மாடுபிடி‌ வீரர்கள்
Updated On :10 ஏப்ரல் 2025, 7:37 am

DIN

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் வியாழக்கிழமை(ஏப்.10) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. வெளிமாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர்அலி தொடங்கி வைத்தார் .

போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 850 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. காளைகளை அடக்க 300 மாடுபிடி‌ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

காளைகளை அடக்கிய வீரா்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்கள் ஆகியோருக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

போட்டியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்துள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஆா்டிமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.