
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் புதன்கிழமை(ஏப்.16) நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது என்ற மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் அரசிதழில் சனிக்கிழமை (ஏப்.12) வெளியானது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் புதன்கிழமை(ஏப்.16) மாலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழக வேந்தா் என்ற முறையில் தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முதல்வர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.