பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

யாருக்கும் இந்தியா அடிபணியாது! டிரம்ப்புக்கு பியூஷ் கோயல் மறைமுகத் தாக்கு!

இந்தியா யாருக்கும் ஒருபோதும் அடிபணியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருப்பதைப் பற்றி...

News image

பியூஷ் கோயல் - கோப்புப் படம்

Updated On :8 ஆகஸ்ட் 2025, 8:57 pm IST

யாருக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பொருளாதார மிரட்டலுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு முதலில் 25 சதவிகித வரியும், அதன்பின்னர் கூடுதலாக 25 சதவிகித வரியும் விதித்தார்.

உலகளாவிய வர்த்தக பதற்றத்துக்கு மத்தியில், புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “யாருக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது” எனத் தெரிவித்தார்.

இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், “இந்தியா கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக ஏற்றுமதிகளைச் செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தியாவை "செத்துப்போன பொருளாதாரம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்திய பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கிண்டல் செய்வது வெட்கக் கேடான விஷயம். அதற்காக நான் அவரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வெளிப்படையாகச் சொல்லப் போனால், இந்தியாவின் பொருளாதாரம் பற்றி பேசிய ராகுல் காந்தியை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது.

நாட்டின் பணம், அந்நிய செலாவணியின் இருப்பு, பங்குச் சந்தைகள் அனைத்தும் வலுவான நிலையிலேயே உள்ளன. பிற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பணவீக்கம் உலகிலேயே மிகக் குறைவாகத்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Summary

India will not bow to anybody, says Piyush Goyal amid trade wars

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.