செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம்: கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடலூர் மாவட்ட மீனவர்கள் வியாழக்கிழமை(டிச.4) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை தொடர்பாக

News image

கோப்புப்படம்

Updated On :4 டிசம்பர் 2025, 9:56 am IST

சிதம்பரம்: கடலூர் மாவட்ட மீனவர்கள் வியாழக்கிழமை(டிச.4) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில்,

வங்கக் கடலில் வானிலை மாற்றம் காரணமாக அதிகமான காற்றின் வேகம் மற்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் வியாழக்கிழமை(டிச.4) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான விசைப்படகுகள் மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள், கட்டு மரங்களில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழிலுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கல் கடலுக்குச் செல்வார்கள் என்பதால், மீன்வளத்துறை எச்சரிக்கை முன்கூட்டியே மீனவர்களுக்கு விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.