உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சென்னையில் இன்று 36 இண்டிகோ விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை(டிச.11) 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

இன்டிகோ விமானங்கள் | கோப்புப் படம்

Published On :

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை(டிச.11) 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக சீரடைந்து வந்தாலும், இந்த நிறுவனத்தின் விமானங்கள் இன்னும் முழுமையாக இயக்கப்படவில்லை.

இந்த நிலையில், 10-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சென்னை விமான நிலையத்தில் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி, 24 புறப்பாடு விமானங்கள், 12 வருகை விமானங்கள் என மொத்தம் 36 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

இதனால், பல பயணிகள் சிரமத்தை சந்தித்தாலும், புதன்கிழமை 70 விமானங்கங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை பாதியாக குறைந்துள்ளதால், பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனா்.

சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்பி, வழக்கமான விமான சேவைகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Summary

36 IndiGo flights have been cancelled in Chennai today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.