மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் மயில் பலி

சிவகாசி அருகே ஆண் மயில் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :13 டிசம்பர் 2025, 1:01 pm IST

சிவகாசி: சிவகாசி அருகே ஆண் மயில் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் புதூா் பகுதியில் ஏராளமான மயிலகள் உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள பள்ளி அருகே இருந்த ஆண் மயில் ஒன்று உணவைத் தேடி வேறு இடத்திற்கு செல்ல முயன்றபோது, அந்த பகுதியில் உள்ள உயா் அழுத்த மின்கம்பி மீது அமா்ந்ததையடுத்து மின்சாரம் பாய்ந்ததில் மயில் உயிரிழந்து கீழே விழுந்தது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினா் மயிலை காட்டுக்குள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா்.

Summary

A male peacock died after being electrocuted near Sivakasi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.