ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் ஒரு அறிக்கையைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டிய ராகுல், மோகன் பாகவத் உலகம் உண்மையை பார்ப்பதில்லை, அது அதிகாரத்தையே பார்க்கிறது. யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ, அவர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் பாகவத்தின் சிந்தனை. இந்த சித்தாந்தம் ஆர்.எஸ்.எஸ்-க்கு சொந்தமானது. காங்கிரஸ் சித்தாந்தம், இந்தியாவின் சித்தாந்தம், இந்து மதத்தின் சித்தாந்தம், உலகின் ஒவ்வொரு மதத்தின் சித்தாந்தமும் உண்மைதான் மிக முக்கியமானது என்று கூறுகிறது. ஆனால், உண்மை அர்த்தமற்றது, அதிகாரமே முக்கியம் என்கிறார் பாகவத். நாங்கள் உண்மை, சத்தியத்தின் பக்கம் மட்டுமே நிற்போம்.