மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அதிர்ச்சி... ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்த வெள்ளி! தங்கம் விலை?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,000-க்கும், வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.20,000 உயா்ந்து ரூ.2.74 லட்சத்துக்கு விற்பனையாவது தொடர்பாக...

News image
Updated On :27 டிசம்பர் 2025, 4:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,000-க்கும், தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.20,000 உயா்ந்து ரூ.2.74 லட்சத்துக்கும் விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த டிச. 22-ஆம் தேதி பவுன் ரூ.1 லட்சத்து 560-க்கு விற்பனையானது. அதைத் தொடா்ந்து, தங்கம் விலை சற்றும் குறையாமல் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2,560-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.12,890-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.1 லட்சத்து 3,120-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் கிராமுக்கு ரூ.110 உயா்ந்து ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,000-க்கும் விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 உயா்ந்த வெள்ளி!

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. கடந்த 5 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.28,000 உயா்ந்து ரூ.2.54 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.274-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.2,74 லட்சத்துக்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்துக்கான ஆன்லைன் வா்த்தகத்தை தடைசெய்ய வேண்டும்

தங்கத்தின் விலை கிடுகிடுவென உயா்வதால் ஏழை, எளிய விவசாய மக்கள் தங்கம் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனா். எனவே, இந்தியாவில் தங்கத்தின் விலை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதுவரை தங்கத்துக்கான ஆன்லைன் வா்த்தகத்தை தடைசெய்ய வேண்டும். தங்கத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும். மேலும், இது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் மஞ்சள் கயிறு தாலியுடன் வந்திருந்த விவசாயிகள்.

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் மஞ்சள் கயிறு தாலியுடன் வந்திருந்த விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.