மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கர்: நக்சல்களால் 2 இளைஞர்கள் படுகொலை!

சத்தீஸ்கரில் 2 பேர் நக்சல்களால் கொலை செய்யப்பட்டதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :4 பிப்ரவரி 2025, 6:08 am

DIN

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாநிலத்தில் நக்சல்களினால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பிஜப்பூரின் புக்டிசேரு கிராமத்தில் கரம் ராஜு (வயது 32) மற்றும் மாதவி முன்னா (27) ஆகிய இரண்டு இளைஞர்கள் நேற்று (பிப்.3) இரவு அடையாளம் தெரியாத நக்சல்களினால் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர் இந்த கொலைக்கான காரணம் என்ன கொலையாளிகள் யார் என்பதை கண்டறிய தங்களது விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜன.26 அன்று பைராம்கார் பகுதியில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்பைக் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்த 41 வயது நபர் ஒருவர் நக்சல்களால் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 68 பொது மக்கள் நக்சல்களினால் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.