கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்தீஸ்கர்: நக்சல்களால் 2 இளைஞர்கள் படுகொலை!

சத்தீஸ்கரில் 2 பேர் நக்சல்களால் கொலை செய்யப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :4 பிப்ரவரி 2025, 6:08 am

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாநிலத்தில் நக்சல்களினால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பிஜப்பூரின் புக்டிசேரு கிராமத்தில் கரம் ராஜு (வயது 32) மற்றும் மாதவி முன்னா (27) ஆகிய இரண்டு இளைஞர்கள் நேற்று (பிப்.3) இரவு அடையாளம் தெரியாத நக்சல்களினால் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர் இந்த கொலைக்கான காரணம் என்ன கொலையாளிகள் யார் என்பதை கண்டறிய தங்களது விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜன.26 அன்று பைராம்கார் பகுதியில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்பைக் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்த 41 வயது நபர் ஒருவர் நக்சல்களால் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 68 பொது மக்கள் நக்சல்களினால் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.