கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரூ.7 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்! 3 பேர் கைது!

அசாமில் ரூ.7 கோடி அளவிலான போதை மாத்திரைகள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

போதை மாத்திரைகள் (கோப்புப் படம்)

Updated On :8 பிப்ரவரி 2025, 12:02 pm

DIN

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.7 கோடி அளவிலான தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தின் புவாமாறா பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 50,000க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட யாபா எனப்படும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இதேப்போல் லோங்காய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5,800 யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

மதிப்பிற்குறிய போதைப் பொருள் கடத்தல் காரர்களே, உங்களது கேளிக்கை விருந்தைக் கெடுத்ததிற்காக ஸ்ரீபூமி காவல் துறையினரின் சார்பில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், உங்களது ரூ.7 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் இன்று (பிப்.8) காலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, நாங்கள் தொடர்ந்து உங்களது கேளிக்கை விருந்துக்களை கெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மெத்தபெட்டமைன் மற்றும் கேப்பைன் ஆகிய மூலப் பொருள்களினால் தயாரிக்கப்படும் யாபா போதை மாத்திரைகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.