பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பாக். எதிரான ஆட்டத்தில் ரச்சின் ரவிந்திராவுக்கு பலத்த காயம்!

ரச்சின் ரவிந்திராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது...

News image
Updated On :9 பிப்ரவரி 2025, 12:12 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நேற்று (பிப்ரவரி 8) தொடங்கியது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூ. அணி 331 ரன்களை இலக்கு வைத்தது. அதிகபட்சமான கிளன் பிலிஃப்ஸ் 101 ரன்கள் அடித்தார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 252 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது.

இதற்கிடையே, நியூசிலாந்து அணி பந்துவீசும்போது பீல்டிங் செய்து கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா, இன்னிங்ஸின் 38-வது ஓவரில் பாக். வீரர் குஷ்தில் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால், பந்து அவரது கைகளுக்கு மேலே சென்று நெற்றியில் பலமாக தாக்கியது. இதனால், நிலைகுலைந்த ரச்சின் அதே இடத்திலேயே அமர்ந்தபடி இருக்க, அவரது நெற்றியிலிருந்து அதிகமாக ரத்தம் வெளியேறியது.

Story image

பின், உடனடியாக மைதானத்திலிருந்து ரச்சின் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இரவில் பாகிஸ்தான் மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால்தான் ரச்சினுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.