ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வீரர்களை பத்திரமாக அழைத்துவர உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

News image
Updated On :20 பிப்ரவரி 2025, 5:26 am

DIN

சென்னை: வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவை அடுத்து, வீரர்களை விமானத்தில் அழைத்து வர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர்கள், கங்கா-காவேரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்த போதிலும் ஏ.சி. முன்பதிவு பெட்டியை வடமாநில கும்பமேளா பயணிகள் ஆக்கிரமித்ததால் கூட்ட நெரிசலில் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏறமுடியாத நிலை ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் ஒரு வீரருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை திரும்ப முடியாமல் தவித்த தமிழக வீரர்கள் சென்னை திரும்ப உதவுமாறு 6 வீரர்கள் உள்பட 11 மாற்றுத்திறனாளி வீரர்கள் தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகல் 1.30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து இரவு 7.30 மணி விமானத்தில் சென்னை வரவுள்ளனர்.

தமிழக அரசுக்கு நன்றி

வாரணாசியில் ரயிலில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்த தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளி வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.