டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

News image
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
Updated On :21 பிப்ரவரி 2025, 10:00 am

DIN

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருப்பத்தூரை சேர்ந்த பெண் தனது உறவினருடன் கிருஷ்ணகிரி மலைக்கு அண்மையில் சென்றார். அப்போது அந்தப் பெண்ணை 4 இளைஞர்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 2 பேர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் இரண்டு பேரும் கிருஷ்ணகிரி அருகே பொன்மலைகுட்டை என்னுமிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீசார் வெள்ளிக்கிழமை சென்றனர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த குற்றவாளிகள் சுரேஷ், நாராயணன் இருவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், சுரேஷின் வலது காலில் குண்டு பாய்ந்தது. மற்றொரு குற்றவாளியான நாராயணன் பாறையில் இருந்து குதித்த போது, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளிகள் தாக்கியதில் காவலர்கள் குமார், விஜயகுமார் ஆகிய 2 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.