முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஜம்முவில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

ஜம்முவில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2025, 1:12 pm IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்முவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் இன்று (பிப்.22) பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தற்போது வரையில் எந்தவொரு தீவிரவாதியும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் பூஞ்ச், ராஜௌரி, உதம்பூர், கதூவா ஆகிய மாவட்ட பகுதிகளிலும் தோதா மற்றும் கிஷ்த்வார் மலைத் தொடர்களிலும், ஜம்முவிலுள்ள இந்திய எல்லைக் கோடு (எல்.ஓ.சி) பகுதிகளின் அருகிலுள்ள காடுகளிலும் தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, நேற்று (பிப்.21) இரவு பூஞ்ச் மாவட்டத்தில் சந்தேகிக்கப்படும் விதத்தில் இரண்டு வெளிநாட்டினர் சுற்றித் திரிந்ததாகக் கூறப்பட்டதினால் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, பூஞ்ச் - ராஜௌரி மாவட்டத்தின் 13 இடங்களிலும், உதம்பூரின் 18 இடங்களிலும், காதெரான் வனப்பகுதிகளிலும் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜம்முவின் அக்நூர் வட்டாரத்திலுள்ள கேரி, பட்டால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.