சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த 3 பேர் மர்ம மரணம்!

ஜம்முவில் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததைப் பற்றி...

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:20 pm IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோதா மாவட்டத்திலுள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

ஜம்முவைச் சேர்ந்த முகேஷ் குமார், அஷுதோஷ் மற்றும் சன்னி சவுதரி ஆகிய மூன்று பேரும் அம்மாவட்டத்தின் பதர்வாஹ் பகுதியிலுள்ள ஒரு தனியார் விருந்தினர் இல்லத்தில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது, அவர்களது சகோதரர் ஒருவரது அழைப்புக்கு பதிலளிப்படாததினால் சந்தேகமடைந்த அவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் நேற்று (ஜன.1) இரவு அம்மூவரின் செல்போன் எண்களை வைத்து சோதனை செய்த போலீஸார் அவர்கள் தங்கியிருந்த விருந்தினர் இல்லத்தை கண்டுப்பிடித்து அங்கு சென்றுள்ளனர்.

பின்னர் நீண்ட நேரமாக அவர்களது அறையின் கதவை தட்டியும் திறக்கப்படாததினால், காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மூவரும் சுயநினைவு இல்லாமல் கிடந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்ட மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தடவியல் நிபுணர்களை வரவழைத்து அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர்.

தற்போது வரை அவர்களது மரணத்திற்கான முழுமையானக் காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அந்த அறையினுள் கரிகட்டைகளைப் போட்டு குளிர்காயப் பயன்படுத்தப்பட்ட ஹீட்டரிலிருந்து வெளியானப் புகையினால் அவர்கள் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.