விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

இந்தியர் கொலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் கைது!

அமெரிக்காவில் இந்தியர் கொலையில் 5 பேர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜனவரி 2025, 1:33 pm IST

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த குல்தீப் குமார் (வயது 35) என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 26 முதல் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நியூ ஜெர்சியிலுள்ள கிரீன்வுட் வனவிலங்கு மேலாண்மை பகுதியில் கடந்த டிச.14 ஆம் தேதி சிதலமடைந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த சடலமானது காணமல் போனதாகக் கருதப்பட்ட குல்தீப் குமார் என்பது உறுதி செய்யப்பட்டு உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டது. அப்போது, அவரது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டதில் அவர் பலியாகியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நியூயார்க் மாகாணத்தின் சௌத் ஓசோன் பார்க் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான சந்தீப் குமார் (34) என்பவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தனது 4 கூட்டாளிகளுடன் இணைந்து கடந்த 2024 அக்டோபர் 22 அன்று குல்தீப் குமாரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சவ்ரவ் குமார் (23), கவுரவ் சிங் (27), நிர்மல் சிங் (30) மற்றும் குருதீப் சிங் (22) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 5 பேரின் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத் தீர்பு வரும் வரையில் சந்தீப் குமார் நியூ ஜெர்சியிலுள்ள ஓஷன் கவுண்டி சிறையிலும் மற்ற 4 பேரும் இந்தியானா மாகாணத்தின் ஃபிரான்க்ளின் பகுதியிலுள்ள ஜான்சன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.