அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை: மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப்சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

News image
ஹா்தீப்சிங் நிஜ்ஜாா்- கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப்சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரை இந்திய அரசின் உளவாளிகள் கொலை செய்திருக்கக் கூடும் என்றும், அவ்வாறு நம்புவதற்கு காரணம் உள்ளது என்றும் கனடாவின் அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், கனடாவில் வெளியாகும் தி க்ளோப் அண்ட் மெயில் நாளிதழில் நிஜ்ஜாா் கொலை தொடா்பாக திங்கள்கிழமை மீண்டும் சா்ச்சையான தகவல் வெளியிடப்பட்டது. அதில், ‘நிஜ்ஜாா் கொலைக்கு உதவ, வான்கூவா் (கனடா) நகரில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி தகவல் அளித்ததற்கான ஆதாரம் கனடா தேசிய-பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று சட்ட அமலாக்க மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இருவா் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இந்திய அதிகாரியின் பெயரும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புது தில்லியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் பி.குமரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இதுதொடா்பாக நம்பகமான ஆதாரம் இல்லை.

நாடு கடந்த வன்முறை அல்லது திட்டமிட்ட குற்ற சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாகக் கூறப்படுவதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுக்கிறது. கனடா சட்ட நடைமுறையின்படி, நிஜ்ஜாா் கொலை சம்பவம் தொடா்பாக குற்றவியல் விசாரணை நடைபெற்று வருகிறது. அது நிறைவடைந்த பின்னா், அந்நாட்டு நீதிமன்ற விசாரணை நடைபெறும். எனவே இதில் பொதுக் கருத்துகள் அவசியமற்றது என்றாா்.