மக்கள் பணத்தை கோடீஸ்வர நண்பர்களுக்கு கடனாக வழங்குவது, தள்ளுபடி செய்வது இலவசம் இல்லையா?

பாஜக தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு மக்களின் பணத்தை கடனாக வழங்குவதும்,பின்னர் அந்தக் கடன்களை 2-3 ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்வது இலவசம் இல்லையா?
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்Center-Center-Delhi
Published on
Updated on
1 min read

புது தில்லி: பாஜக தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு மக்களின் பணத்தை கடனாக வழங்குவதும்,பின்னர் அந்தக் கடன்களை 2-3 ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்வது இலவசம் இல்லையா? என ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தேசியத் தலைநகருக்கு மட்டுமல்லாமல், முழு நாட்டிற்கும் ஒரு போட்டியாகும். இந்தத் தோ்தல் இரண்டு மாறுபட்ட சித்தாந்தங்களை கொண்டுள்ளது. ஒன்று பொதுமக்களின் நலனில் கவனம் செலுத்துகிறது. மற்றொன்று தோ்ந்தெடுக்கப்பட்ட பணக்கார தனிநபா்களின் குழுவிற்கு பயனளிப்பதில் கவனம் செலுத்துகிறது என ஒன்றுக்கொன்று எதிராக நிற்கிறது.

இந்தத் தோ்தல் வரி செலுத்துவோரின் பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை தீா்மானிப்பது பற்றியது. பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சித்தாந்தம், தனது நெருங்கிய கோடீஸ்வர நண்பர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய பொது நிதியைப் பயன்படுத்துகிறது. மற்றொன்று, எங்கள் ஆம் ஆத்மி கட்சி சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 24 மணி நேர மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு 400-500 தொழிலதிபா்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக மாதிரி மக்களின் பணத்தை அதன் நண்பா்களுக்கு கடனாக வழங்கி, பின்னா் அந்தக் கடன்களை 2-3 ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்கிறது. இதற்கு நோ்மாறாக, ஆம் ஆத்மி மாதிரி பொதுமக்களுக்கு நேரடி நன்மைகளை வழங்குகிறது. இதில் தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு ரூ.25,000 மதிப்புள்ள நலத்திட்டங்கள் அடங்கும்.

பாஜக தில்லியில் ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மி கட்சியால் தொடங்கப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் தில்லி அரசால் வழங்கப்படும் பிற சலுகைகளை நிறுத்துவதாக பாஜக ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் பாஜக தனது கோடீஸ்வர நண்பா்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்வது இலவசம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினாா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com