பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ரெளடி அன்பு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீரங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு பகுதியில் ரெளடி திலீப் தரப்பை சேர்ந்த அன்பு என்பவரை, மர்ம கும்பல் இன்று காலை வெட்டிக் கொலை செய்துள்ளது.
சரித்திரப் பதிவு குற்றவாளியான அன்பு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இன்று காலை ஸ்ரீரங்கம் மேலூர் சாலைப் பகுதியில் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றுவிட்டு பின்னர் வீட்டிற்கு வரும் வழியில் மர்ம கும்பல் இவரை துரத்தியது.
சுதாரித்துக் கொண்ட அன்பு அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் தப்பி ஓடினார், ஆனால் தொடர்ந்து விரட்டி வந்த மர்ம கும்பல் தெப்பக்குளம் பகுதியில் அவரை பிடித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
படுகொலை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பலியான அன்புவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பேருந்து நிறுத்தப் பகுதியில் நடைபெற்ற படுகொலையைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆலங்குளம்: கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிய மர்ம கும்பல்

ரெளடி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை

இளைஞா் வெட்டிக் கொலை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



