இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெறுவதினால் அங்கு வருகைத் தருமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஹிரோஷிமா, நாகசாகி மேயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த 1945 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது அச்சுப் படையைச் சேர்ந்த ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசித் தாக்குதல் நடத்தியது.
இதில், ஹிரோஷிமாவில் 1,40,000 பேரும் நாகசாகியில் 74,000 பேரும் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த பெரும்பாலான மக்கள் அணு கதிர்வீச்சின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு பின்னாட்களில் பலியாகினர்.
இந்த கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இந்தாண்டுடன் (2025) 80 ஆண்டுகள் நிறைவடைவதைத் தொடர்ந்து அங்கு வருகைத் தருமாறு 2வது முறையாக தற்போது பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகர மேயர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அந்நாட்டிற்கு வருகைத் தந்து அணு குண்டு தாக்குதலில் உயிர்பிழைத்த மக்களிடம் நேரில் உரையாடி அவர்களது அமைதிக்கான ஆசையை தெரிந்துக்கொள்ளுமாறும், உலகத்திலுள்ள அணு ஆயுதங்களை ஒழித்து அமைதியை நிலைநாட்ட தலைமைத் தாங்குமாறு அதிபர் டிரம்பை வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, கடந்த 2010 ஆம் ஆண்டு அமெரிக்க தூதர் ஜான் ரூஸ் என்பவர்தான் ஹிரோஷிமா நினைவேந்தலில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க பிரதிநிதி ஆவார். பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபர் ஜோ பைடன் அணுகுண்டுத் தாக்குதலின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
லட்சக்கணக்கான மக்களை கொன்ற இந்த தாக்குதலுக்கு இதுவரையில் அமெரிக்கா மன்னிப்பு கேட்காத நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பின் முந்தைய ஆட்சியின்போது (2017-2021) இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் அப்போது கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்க தளங்களைத் தாக்கிய ஈரான்! பலத்த அடியைச் சந்திக்கப் போகிறார்கள்! - டிரம்ப் மிரட்டல்!
உலகம் யார் பக்கம்?

நாங்கள் டிரம்ப்பை கொல்வோம்! - ஈரானின் பதாகையால் அதிர்ச்சி!
அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



