ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 28,000 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 28,000 கனஅடியாக குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்ததால்,தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்தது.
இந்நிலையில். வியாழக்கிழமை 32,000 கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 28,000 கனஅடியாக நீா்வரத்து குறைந்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை 17 நாளாகவும் மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
The flow of water in the Cauvery River at Hogenakkal decreased to 28,000 cubic feet per second on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

