தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 3,935 காலி பணியிடங்களுக்கான தேர்வை 13,89,738 பேர் எழுதுகிறார்கள். சென்னையில் மட்டும் 94 ஆயிரத்து 848 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன கண்காணிப்பாளர் என 25 பதவிகளுக்கு இந்த தேர்வை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம் என்பதால் நிறைய பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இந்த தேர்வில் தமிழ் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இருக்கும். மற்ற தேர்வுகளுக்கு பல கட்டங்களில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை கிடைக்கும். ஆனால், இந்த தேர்வு சிங்கிள் ஸ்டேஜில் நடக்கும். அதனால் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் வேலை கிடைக்கும்.