மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.
இந்நிலையில், மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவின் அனைத்து பொருள்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருப்பது அமெரிக்க-இந்தியா வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்தியாவுக்கு ஒரு பெரிய அடியாகும்.
வெளியுறவு கொள்கை மற்றும் அரசப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மோடி-டிரம்ப் நட்புறவு கொடுக்க முடியாது. இந்தியாவை சிறந்த நாடாக்குவோம்(மெகா) என மோடியும், அமெரிக்காவை சிறந்த நாடாக்குவோம்(மெகா) என மோடியும் டிரம்பும் இணைந்து கூறினார்களே, என்னவாயிற்று இப்போது என கூறியுள்ளார்.
மேலும், 'தோஸ்தி' என்பது ராஜதந்திரம் மற்றும் கடினமான பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று கிடையாது.
அமெரிக்கா விதித்த வரி உலக வர்த்தக அமைப்பு விதிகளை தெளிவாக மீறுவதாகும்
Summary
The 25 per cent tariff on all Indian exports to the United States PLUS penalty for buying Russian oil is a big blow to India's trade with the U.S.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நட்புக்கு தகுதியில்லாதவரிடம் நட்பு பாராட்டுவது வீண்: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்

அபிஜித் தீப்கே இறந்ததாக வெளியான செய்தி பொய்யானது

சாலையோர ஆக்கிரமிப்பு கடையை அகற்றக் கூறிய காவலா் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

மேக்கேதாட்டு திட்டத்தை கைவிட கா்நாடக காங்கிரசை வலியுறுத்த முடியாது: மாணிக்கம் தாகூா்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



