ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிருஷ்ணகிரியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை! ஏராளமானோர் பங்கேற்பு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

News image

பக்ரீத் சிறப்புத் தொழுகை

DPS

Updated On :7 ஜூன் 2025, 3:56 am

DIN

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பக்ரித் திருநாளையொட்டி கிருஷ்ணகிரி அடைத்த ராஜூ நகரில் அமைந்துள்ள. ஈத்கா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக இஸ்லாமியர்கள் ஊர்வலமாகச் சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, பர்கூர், சூளகிரி, ஒசூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

தொழுகைக்குப் பின்னர் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து குர்பானி கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.