இலங்கைத் தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மதுரையில் பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை இரவு தனி விமானம் மூலம் மதுரை வந்தாா். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து சுற்றுச்சாலை பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கினாா்.
இந்நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை காலை தெற்காவணி மூல வீதி வழியாக சென்றாா்.
அப்போது, மதுரை ஆதீன மடத்தின் அருகே வந்தபோது, ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வரவேற்பதற்காக காத்திருந்தாா். இதைப்பாா்த்த அமித் ஷா, காரில் இருந்து இறங்கியதையடுத்து, அப்போது அமித் ஷாவுக்கு, மதுரை ஆதீனம் காவி நிற சால்வை அணிவித்து வரவேற்றாா்.
பின்னா் மதுரை ஆதீனத்தின் மூலமாக வெளியாகும் ’தமிழாகரன்’ இதழையும், திருஞானசம்பந்தரின் புத்தகத்தையும், மனு ஒன்றையும் மதுரை ஆதீனம் வழங்கினாா். இதைப்பெற்றுக் கொண்ட அமித்ஷா, நன்றி தெரிவித்துவிட்டு கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றாா்.
இதுகுறித்து மதுரை ஆதீனம் செய்தியாளர்களுடன் பேசுகையில், உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம், இலங்கையில், இலங்கைத் தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், இந்திய மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி இருக்கிறேன். அவா் நல்ல முடிவு எடுப்பாா் என நம்புகிறேன்‘ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமித் ஷாவுடன் அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் ஆலோசனை

அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்குப் பாதுகாப்பு: உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவு

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை







