வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

முருகன் மாநாடு நாளில் எடப்பாடி பழனிசாமிக்கு வேல் கொடுத்த அதிமுகவினர்!

முருகன் மாநாடு நடக்கும் நாளில் அதிமுக தொண்டா்கள் வேல் வழங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

News image

முருகன் மாநாடு நடக்கும் நாளில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வேல் வழங்கிய அதிமுக தொண்டா்கள்.

Updated On :22 ஜூன் 2025, 2:05 pm

சேலம்: முருகன் மாநாடு நடக்கும் நாளில் அதிமுக தொண்டா்கள் வேல் வழங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் அலுவலகத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகா் மாவட்ட அதிமுக வா்த்தக அணியின் இணைச்செயலாளா் செம்பன் ஏற்பாட்டில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வழக்குரைறிஞா் பிரிவு தேசிய பொதுச்செயலாளா் சுப்ரமணியம் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கொளத்தூா் ஒன்றியம் முன்னாள் தலைவா் இளங்கோ, மாணவரணி செயலாளா் கௌரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சேலம் மாநகா் மகளிா் அணி அமைப்பாளா் சுமதி உள்பட 400-க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

புதிதாக இணைந்தவா்களுக்கு கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்ற எடப்பாடி பழனிசாமி அனைவரும் சிறப்பாக செயல்படும்படி வாழ்த்து தெரிவித்தாா்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டா்கள், நிா்வாகிகள் பிரம்மாண்ட மாலை அணிவித்து முருகன் வேலை பரிசாக கொடுத்தனா். அதை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, முருகன் மாநாடு அன்று வேல் கொடுத்துள்ளீா்கள்; மதுரைக்கு போவதற்குள்ளே இங்கே கொடுத்து விட்டீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.