எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!

பிரிட்டன் நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :4 மார்ச் 2025, 9:40 pm IST

பிரிட்டன் ராஜ்ஜியதில் இஸ்லாமிய பாரம்பரிய மாதத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு டிக்டாக் நிறுவனம் நிதியுதவி வழங்கியதற்கு உய்குர் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டில் முஸ்லிம் வுமன்ஸ் நெட்வொர்க் எனும் அமைப்பினால் பிரிட்டனில் இஸ்லாமியர்களின் கலாச்சார பங்களிப்பை கொண்டாடும் விதமாக பலதரப்பட்ட சமூகத்தினர், படைப்பாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்டாக் செயலி நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு பிரிட்டனில் வாழும் சீனாவைச் சேர்ந்த உய்குர் இஸ்லாமிய சமூகத்தினர் தங்களது கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிரான அந்நாட்டு அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பான காட்சிகளையும் விடியோக்களையும் டிக்டாக் செயலியில் பகிர்வதற்கு அந்நிறுவனம் தணிக்கை செய்து தடைவிதிப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், தற்போது பிரிட்டனில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் டிக்டாக் செயலியின் ஈடுபாட்டை பல்வேறு அமைப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இதனை முற்றிலுமாக மறுத்துள்ள டிக்டாக் தகவல் தொடர்பு குழுவின் உறுப்பினரான நிகோலஸ் சிமித் கூறுகையில் உய்குர் தொடர்பான விவகாரத்தில் டிக்டாக் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டானது முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ஜின்ஜியாங்கில் உய்குர் சமூகத்தினருக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் கண்டித்துள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியில், உய்குர் மக்களுக்கு விதிக்கப்படும் தடுப்புக்காவல், கட்டாய உழைப்பு, கட்டாய கருத்தடை, கலாச்சார மற்றும் மத நடைமுறைகளை அடக்குதல் போன்ற சீனாவின் நடவடிக்கைகளை இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால், சீன அரசாங்கம் இந்த நடவடிக்கைகள் அனைத்து அந்நாட்டு தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகத் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.