மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமானது ‘மாதவ் புலிகள் காப்பகம்’ எனும் பெயரில் விரைவில் திறக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் ’புலிகளின் மாநிலம்’ எனும் பெருமையை தக்கவைப்பதுடன் புதிய சாதனைகளை நோக்கி நகர்வதாக முதல்வர் மோகன் யாதவ் இன்று (மார்ச் 5) கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புலிகள் காப்பகத்தைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்படும் விடுதிகள், ரிசார்ட்டுகள் அனைத்தும் சுற்றுலாக் காலம் முழுவதும் மக்களால் நிறைந்திருப்பதாகவும்; இது மத்தியப் பிரதேசத்தின் மீதான சுற்றுலாப் பயணிகளின் அன்பையும், அம்மாநிலத்தின் காடுகளின் வளமையையும் உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இந்திய பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 950 பில்லியன் டாலர்!
இந்நிலையில், புதிய மாதவ் புலிகள் சரணாலயம் மற்றும் வனவிலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், சம்பல் பகுதியில் மாநில அரசு ஒரு புதிய சுற்றுலாப் பகுதியை உருவாக்கும் என்றும் இதனால் அப்பகுதியின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் யாதவ் கூறியதாவது: ஒருபுறம், ஆசியாவில் நமது சம்பல் பகுதியில் சிறுத்தைகள் மீண்டும் சுற்றித் திரிவதைக் காணலாம். மேலும், சம்பல் ஆற்றில் டால்பின் கரியல் திட்டத்திற்கான பணிகளும் அதேப் பகுதியில் நடந்து வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், அந்தப் பகுதியில் கழுகுகள் நிறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் விரைவில் அங்கு இரண்டு புலிகளை விடுவிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ம.பி. பள்ளிகளில் பூஜ்ஜியமாகக் குறைந்த இடைநிற்றல் விகிதம்: மோகன் யாதவ்!

பாடலுடன் தொடங்கும் ரஜினி - 173 படப்பிடிப்பு!

விரைவில் ரஜினி - 173 படப்பிடிப்பு!

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்: முதல்வா் மோகன் யாதவ்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



