நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இந்திய பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 950 பில்லியன் டாலர்!

அதிக நிகர மதிப்பு கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 9.4% அதிகரிக்கும் என்று ஆய்வில் தகவ்ல்

News image
Updated On :5 மார்ச் 2025, 5:45 pm IST

இந்தியர்களில் அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 9.4% அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்தியர்களில் அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை குறித்து உலகளாவிய ஆலோசனை நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில், 2025 ஆம் ஆண்டில் அதிக நிகர மதிப்பு கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 85,698 என்ற நிலையில் இருக்கும் என்று கணித்துள்ளது; தொடர்ந்து, 2028 ஆம் ஆண்டில் 9.4 சதவிகிதம் அதிகரிப்புடன் 93,753 என்ற எண்ணிக்கையை எட்டும் என்று கூறுகிறது.

உலகளவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்நிலையில், 2023-ல் 2,243,300 எண்ணிக்கையில் இருந்து, 2024-ல் 4.4 சதவிகிதம் உயர்ந்து 2,341,378-ஆக மாறியது.

உலகளவில் பணக்காரர்களில் 3.7 சதவிகிதத்தினரைக் கொண்ட இந்தியா, தற்போது அமெரிக்கா (9,05,413), சீனா (4,71,634), ஜப்பான் (1,22,119) ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் உள்ளது. இந்திய பில்லியனர்களின் மொத்த செல்வம் 950 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.