
இந்தியர்களில் அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 9.4% அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்தியர்களில் அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை குறித்து உலகளாவிய ஆலோசனை நிறுவனம் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில், 2025 ஆம் ஆண்டில் அதிக நிகர மதிப்பு கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 85,698 என்ற நிலையில் இருக்கும் என்று கணித்துள்ளது; தொடர்ந்து, 2028 ஆம் ஆண்டில் 9.4 சதவிகிதம் அதிகரிப்புடன் 93,753 என்ற எண்ணிக்கையை எட்டும் என்று கூறுகிறது.
உலகளவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்நிலையில், 2023-ல் 2,243,300 எண்ணிக்கையில் இருந்து, 2024-ல் 4.4 சதவிகிதம் உயர்ந்து 2,341,378-ஆக மாறியது.
உலகளவில் பணக்காரர்களில் 3.7 சதவிகிதத்தினரைக் கொண்ட இந்தியா, தற்போது அமெரிக்கா (9,05,413), சீனா (4,71,634), ஜப்பான் (1,22,119) ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் உள்ளது. இந்திய பில்லியனர்களின் மொத்த செல்வம் 950 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.