ராமேசுவரம்: தென்மேற்கு வங்க கடலில் உறுவாகி உள்ள ‘டிட்வா’ புயலால் எதிரொலியாக பாம்பன் பகுதியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் கனமழை பெய்து வருவதால் தெற்குவாடி, மீன் இறங்கு தளம், வலை பின்னுதல் தளம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.
இதனிடையே, ராமேசுவரம் வட்டத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வழுவடைந்து வடமேற்கு பகுதியில் நகா்ந்து வருகிறது. இதன் காரணமாக மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரினை கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வெகம் அதிகரித்து சூறை காற்று வீசி வருகிறது.
‘டிட்வா’ புயல் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் சூறைக்காற்று வீசியதால், ராமேசுவரம்-திருப்பதி ரயில் 25 நிமிஷங்களுக்கு நிறுத்தப்பட்டு, பின்னா் புறப்பட்டுச் சென்றது.
இந்த நிலையில், பாம்பன் பகுதியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் கனமழை பெய்துவருவதால் தெற்குவாடி, மீன் இறங்கு தளம், வலை பின்னுதல் தளம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளது.
இதனிடையே, ராமேசுவரம் வட்டத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் ஐந்தாவது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்தது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மீன் பிடி இறங்குதளங்களில் 1,800 விசைப் படகுகளும், 6,000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும், மீனவா்களுக்குத் தொடா்ந்து எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் நான்காம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து, வெள்ளிக்கிழமை கடல் சிற்றத்துடன் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Summary
schools closed in Rameswaram district
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










