புணேவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,470 போதை மாத்திரைகளை கோவை உக்கடம் அருகே பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் போலீசார் சுங்கம் புறவழிச் சாலை மின்சார வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர், அதில் அவர் கோவை புதூரைச் சேர்ந்த முகமது தாரிக் என்பதும், அவர் போதை மாத்திரை விற்பனை செய்வதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,470 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்
மராட்டிரம் மாநிலம் புணேவில் உள்ள மருந்து கடையில் குறைந்த விலைக்கு போதை மாத்திரைகளை வாங்கி கோவை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
முகமது தாரிக் மீது ஏற்கனவே கஞ்சா போதைப் பொருட்கள் விற்றது உள்ளிட்ட நான்கு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் முகமது தாரிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதேபோன்று பெங்களூருவில் இருந்து கோவைக்கு மெத்தப்பேட்டை என்ற உயர்ரக போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் கவுண்டம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் மாட்டுபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பதும் அவர் பெங்களூருவில் இருந்து மெத்தப்பேட்டை கடத்தி வந்து கோவையில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்களுக்கு ஒரு கிராம் ரூ. 3,500-க்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிராம் மெத்தப்பேட்டை 2 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
Summary
Drug pills smuggled from Pune seized
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீரில் 2,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: இணையவழியில் விற்றவா் கைது

3,500 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

மும்பையில் இருந்து கடத்தி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்
150 போதை மாத்திரைகள் பறிமுதல்: தம்பதி உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



