
நாடு முழுவதும் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலைப் படிப்புகளுக்கான இடங்களில் 20 சதவீதத்தை அகில இந்திய போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும் என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
ஒரு நாடு, ஒரு விவசாயம், ஒரு குழு என்ற கொள்கையின்படி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தத் தேர்வை நடத்தும் என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை 12 ஆம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மை படித்த மாணவர்கள் ‘க்யூட்-ஐசிஏஆர்’சிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய சிவராஜ் சிங் சௌகான், வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலைப் படிப்புகளுக்கான இடங்களில் 20 சதவீதத்தை அகில இந்திய போட்டித் தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை எளிமைப்படுத்தப்படுவதாக கூறினார்.
இது 2025-26 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்றும், இது பி.எஸ்சி. வேளாண்மையில் சேருவதில் உள்ள சேர்க்கை தொடர்பான சிக்கல்களையும் நீக்கும். இதன் மூலம் சுமார் மூவாயிரம் மாணவர்கள் நேரடியாக பயனடைவார்கள் என்று சௌகான் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.