ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தோனேசியா எண்ணெய் கப்பலில் தீ: 10 பேர் பலி, 18 பேர் காயம்!

இந்தோனேசியாவில் புதன்கிழமை அதிகாலை எண்ணெய் கப்பல் ஒன்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீப்பிடித்ததில் 10 பேர் பலியானது தொடர்பாக...

News image
கோப்புப்படம்
Updated On :16 அக்டோபர் 2025, 3:19 am

தினமணி செய்திச் சேவை

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள் மாகாணத்தில் புதன்கிழமை அதிகாலை எண்ணெய் கப்பல் ஒன்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீப்பிடித்ததில் 10 பேர் பலியாகினர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகம் உள்ளது. அந்த துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தக் கப்பலில் செவ்வாய்க்கிழமை ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதை தொடர்ந்து கப்பலின் கியாஸ் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.

இந்த விபத்தில் புதன்கிழமை நிலவரப்படி, 10 பணியாளர்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் கப்பலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்.

தீப்பிடித்து எரிந்து கப்பலில் எண்ணெய் எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் கப்பலின் உரிமையாளர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது

கடந்த 2009 இல் கட்டப்பட்ட இந்தக் கப்பலில், கடந்த ஜூன் மாதம் படாமில் பழுதுபார்க்கும் போது தீ விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்தனர். அந்த தீ விபத்து பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாகவும், வெல்டிங் பணியின் போது ஏற்பட்ட தீப்பொறிகளால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அதே கப்பலில் தற்போது மீண்டும் தீ விபத்து நிகழ்ந்துள்ளதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படாம் தீவு சிங்கப்பூரிலிருந்து கடல் வழியாக சுமார் 20 கிலோமீட்டர் (12.4 மைல்) தொலைவில்தான் உள்ளது.

summary

At least 10 people were killed and 18 injured after an oil tanker caught fire early on Wednesday as it was being repaired in Indonesia's Riau Islands province, according to local police.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.