விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விஜய் தாமதமே 41 மரணங்களுக்குக் காரணம்: டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

விஜய் தாமதமாக வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணமடைந்ததாக ஞாயிற்றுக்கிழமை திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டினார்.

News image

திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்

Updated On :19 அக்டோபர் 2025, 1:28 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: கரூரில் கடந்த செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார நிகழ்ச்சிக்கு அந்தக் கட்சித் தலைவர் விஜய் தாமதமாக வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணமடைந்ததாக ஞாயிற்றுக்கிழமை திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டினார்.

அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

கட்சி பிரசார நிகழ்ச்சிக்கு வருவதில் ஏற்பட்ட தாமதமே மரணங்களுக்குக் காரணம் என்பதால் 41 பேர் மரணத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

விஜய் வீட்டிலிருந்து அரசியல் செய்கிறார். 41 மரணங்களுக்கும் அவர்தான் காரணம். இவ்வளவு பெரிய மரணங்களுக்கு அவரது தாமதமே காரணம். அவர் பிரசார நிகழ்ச்சிக்கு மதியம் 12 மணிக்கு அங்கு வருவேன் என்று சொன்னபோது, ​​குறைந்தது மதியம் 1 மணிக்குள்ளாவது வந்திருக்க வேண்டும். கூட்டம் நடத்த அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 முதல் இரவு 10 மணி வரை எங்களுக்கு நேரம் ஒதுக்கியுள்ளதாக அவர் கூறுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் சமாளிப்பதற்கான வழி அதுவல்ல என்று இளங்கோவன் கூறினார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேரை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிதியை சனிக்கிழமை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதை அடுத்து டிகேஎஸ் இளங்கோவன் இவ்வாறு குற்றம்சாட்டியிருப்பதாக விஜய் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விஜய் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டப்படி, அக்டோபர் 18 ஆம் தேதி அவர்களது வங்கி கணக்கில் ரூ.20 லட்சம் செலுத்தப்பட்டதாகவும், எங்கள் ஆதரவு மற்றும் இரக்கத்தின் அடையாளமாக இதை ஏற்றுக்கொள்ளுமாறு விஜய் கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும், உறவை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் தனிப்பட்ட சந்திப்புக்கு அனுமதி பெறுவதற்கு கட்சி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அனுமதி வழங்கப்பட்டவுடன், நிச்சயமாக உங்களைச் சந்திக்க வருவோம். இந்த கடினமான நேரத்தில், நாங்கள் உங்களுடன் எல்லா வழிகளிலும் நின்று, ஆறுதலையும் ஆதரவையும் வழங்குவோம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், இந்த வேதனையான அனைத்தில் இருந்தும் நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

Summary

DMK spokesperson TKS Elangovan on Sunday blamed Tamilaga Vettri Kazhagam (TVK) chief Vijay over the 41 deaths in the unfortunate Karur stampede incident.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.