பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சம்பா இளம் பயிர்களை சூழ்ந்த மழைநீரை வடிய வைக்கும் பணி தீவிரம்

சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 300 ஏக்கர் சம்பா இளம் பயிர்களை மழைநீர் சூழ்ந்த நிலையில் அதனை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

News image
திருக்குவளை பகுதியில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பயிர்களே தெரியாத அளவில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடக காட்சியளிக்கும் விளைநிலங்கள்.
Updated On :23 அக்டோபர் 2025, 5:26 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருக்குவளை: திருக்குவளை அருகே  கொடியாலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 300 ஏக்கர் சம்பா இளம் பயிர்களை மழைநீர் சூழ்ந்த நிலையில் அதனை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்று நாள்களாக கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மாவட்டத்தில் மழை ஓய்ந்திருந்தாலும் வடிகாலாக நாகை மாவட்டம்  இருப்பதால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழை நீர் தற்போது வடிந்து வருகிறது.

இந்த நிலையில், கீழ்வேளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நேரடி விதைப்பில் முளைத்த சம்பா இளம் நெற்பயிர்கள் முழுவதுமாக மழைநீரில் மூழ்கி உள்ளது.

மேடான ஒரு சில இடங்களில் உள்ள விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் மற்றும் தற்போது வடிய தொடங்கியுள்ளது. குறிப்பாக கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாலத்தூர், தென்சாரி, மயிலாப்பூர், கோவில்பத்து, வடபாதி, மணலூர், காக்கழனி, செருநல்லூர், தேவூர், வெண்மணி, ஆந்தக்குடி, காவலாக்குடி திருப்பஞ்சரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5000-க்கும் மேலான நேரடி விதைப்பு மூலமாக முளைத்த சம்பா இளம் நெற்பயிர்கள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கியதால் அதன் வேர்ப்பகுதி பாதிக்கும் சூழலில் உள்ளது. 

குறிப்பாக கொடியாலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பயிர்களே தெரியாத அளவில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடக காட்சியளித்த பகுதிகளில் மழைநீர் சற்று வடியத் தொடங்கியதால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை

உடனடியாக வேளாண்மைதுறை அதிகாரிகள் மூழ்கிய சம்பா பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அடுத்தகட்ட சாகுபடிக்கான ஆலோசனைகளை வேளாண்மைத் துறையினர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர்

summary

Work is in full swing to drain rainwater from young samba crops

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.