மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் சனிக்கிழமை ரசாயன தொட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். நல்லவாய்ப்பாக பெரும் அசாம்விதங்கள் எதுவும் நிகழவில்லை.
மேட்டூர் அருகே கருமலைக்கூடல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை 10-க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை பார்த்துவந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ரசாயன தொழிற்சாலை பாய்லர் வெடித்து சிதறியது. இதில், பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்களான ராகேஷ், சல்மான் ஆகிய இரண்டு பேருக்கும் காலில் ரசாயனம் பட்டதில் பாதிப்புக்குள்ளாகினர்.
மேலும், பலர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் எதுவும் நிகழவில்லை என கூறப்படுகிறது.
மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Several people were injured in an explosion in a chemical tank at the Sidco Industrial Estate near Mettur on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

ஆலங்குளம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து







