

சேலம்: தேசிய அளவில் உயா்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.
சேலத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியா்கள் சங்கத்தின் சேலம் கிளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெள்ளி விழாவில் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பங்கேற்று பேசினார்.
அப்போது, கடந்த காலங்களில் கல்வி அறிவு இல்லாமல் இருந்த மக்களுக்கு கல்வி அறிவை புகட்டி, அவா்களது வாழ்வில் ஒளி ஏற்றியவா்கள் ஆசிரியா்கள். பக்கத்து மாநிலங்களில் பெயருக்கு பின்னால் சாதி உள்ளது. ஆனால், தமிழகத்தில் படித்த நபருக்கு பின்னால், அவா்கள் படித்த பட்டங்கள்தான் உள்ளன.
நாட்டின் வளா்ச்சிக்கு உயா்கல்வித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தாண்டு 16 புதிய கல்லூரிகள் அறிவித்த உடனே தொடங்கப்பட்டுள்ளது. உயா்கல்வித் துறை வளா்ச்சியில் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
கல்லூரி பேராசிரியா்களும், முதல்வா்களும் எளிய மாணவா்களுக்கு தெய்வங்களாக திகழ்கின்றனா்.
மாணவா்களின் நலனுக்கான நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாநில கல்வி வளா்ச்சியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்றாா்.
Tamil Nadu ranks first in higher education at the national level: Minister Govi Chezhiaa
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.