விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வெள்ளக்கோவில் நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கு: நிலத்தரகர் கைது

வெள்ளக்கோவில் அருகே நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் தலைமறைவான நிலத்தரகர் கைது செய்யப்பட்டது குறித்து...

News image

கைது செய்யப்பட்ட ராஜ்குமார் - DNS

Updated On :27 அக்டோபர் 2025, 10:58 am

வெள்ளக்கோவில் அருகே நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் தலைமறைவான நிலத் தரகர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகிலுள்ள வரக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஈஸ்வரமூர்த்தி (41). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வட்டித் தொழில் செய்து வந்தார்.

உள்ளூரில் ஒரே ஊரைச் சேர்ந்த நெருங்கிய உறவினரான கார் மற்றும் நிலத் தரகரான ராஜ்குமாருடன் (43) சேர்ந்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், கூட்டாக வாங்கிய நிலங்களை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஈஸ்வரமூர்த்தி, அவருடைய தந்தை கிருஷ்ணமூர்த்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ராஜ்குமார் தான் ஓட்டி வந்த காரை மோதி ஈஸ்வரமூர்த்தியை இரும்புக் கம்பியால் தாக்கி, அவர் மீது காரை ஏற்றியதால் அவர் உயிரிழந்தார். அவரது தந்தை உயிர் தப்பினார்.

இது குறித்து ராஜ்குமார் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், தலைமறைவான அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் மேட்டாங்காட்டுவலசு - வள்ளியிரச்சல் சாலை எடைக்காட்டுவலசு பிரிவருகே பதுங்கியிருந்த ராஜ்குமாரை, வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ஞானப்பிரகாசம் மற்றும் போலீஸார் கைது செய்தனர்.

சம்பவத்துக்குப் பிறகு அவர் சென்னை சென்று விட்டு, செலவுக்குப் பணம் இல்லாததால் வீட்டுக்கு வந்த போது பிடிபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பின்னர், காங்கயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான ராஜ்குமாருக்கு மனைவி, ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Summary

Vellakovil murder case Landlord arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.