வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்
Published on
Updated on
1 min read

வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

அலுவலக உதவியாளா் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வாரத்திற்கு 2 முகாம் மட்டுமே நடத்த வேண்டும், 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள கருணை பணி நியமன உச்சவரம்பினை மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழியா்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அந்த அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

வெறிச்சோடி கிடக்கும் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம்.

Summary

The office was deserted due to the 48-hour protest organized by the Revenue Officers Association!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com