செப். 18-இல் புதுவை சட்டப்பேரவை கூடுகிறது: ஆா்.செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை செப்டம்பா் 18-ஆம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார்.
புதுச்சேரி பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்
புதுச்சேரி பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்
Published on
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை செப்டம்பா் 18-ஆம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த மாா்ச் 27 அன்று முடிந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி செப்டம்பரில் பேரவைக் கூட்டப்பட வேண்டும்.

எனவே, வரும் 18-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு புதுவை சட்டப்பேரவை கூடுகிறது. இக்கூட்டம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.

புதுவையில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்ட மசோதா மற்றும் ஜிஎஸ்டி 2-ஆவது சட்ட திருத்த மசோதா ஆகியவை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவா் கூறினார்.

Summary

Puducherry Legislative Assembly to meet on Sept. 18: R. Selvam announces

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com