செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்
மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்
Published on
Updated on
1 min read

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ரயில்வே பொது மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

நாள்தோறும் குறைந்தது 30 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது.

ஆனால், ரயில் நிலையத்தில் பயன்பாட்டில் இருந்த மருத்துவ உதவி மையம் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் இருக்கிறது.

இதனை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்

Summary

The non-functional medical assistance center at Chennai Egmore railway station should be made operational.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com